ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 46 லட்சம் காணிக்கை
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 46 லட்சத்து, 13 ஆயிரத் து, 143 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும்ஒன்பது காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஹர்சினி மற்றும் அறநிலையத்துறை கிணத்துக்கடவு ஆய்வாளர் மகேஸ் வரி முன்னிலை வகித்தனர்.
கோவிலிலுள்ள, 22 நிரந்தர உண்டியல்களில், 35 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 456 ரூபாய்;ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்களில், 11 லட்சத்து, மூவாயிரத்து, 687 ரூபாய் காணிக்கை செலுத் தப்பட்டிருந்தது. தங்கம், 102.7 கிராம்; வெள்ளி, 617.8 கிராம் இருந்தது.
கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.