பழநி முருகன் கோயில் உண்டியல் வசூல் 1.66 கோடி
ADDED :3053 days ago
பழநி : பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் ஒரு கோடியே, அறுபத்து ஆறு லட்சத்து ஒன்பதாயிரம் வசூலாகி உள்ளது. பழநி மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 735 கிராம், வெள்ளி 17 ஆயிரத்து 950 கிராம், வெளிநாட்டுக் கரன்சி 1044 , ரொக்கமாக ஒரு கோடியே அறுபத்து ஆறு லட்சத்து ஒன்பதாயிரம் கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.