நமக்கு ஏழுபிறவிகள் இருப்பது உண்மையா?
ADDED :3044 days ago
எல்லா உலகங்களும் உங்கள் கண்ணெதிரிலேயே உள்ளன. அறிவாற்றலைப் பெருக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான். மனதை அடக்கும் சக்தி இல்லாவிட்டால் நாம் வாழும் சூழலே நரகமாகி விடுகிறது. பேரின்ப நிலையை அடையும் வரை உயிர் வேறு வேறு உருவில் பிறப்பு, இறப்பை அடைந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில் பிறவிகளுக்கு எண்ணிக்கையே கிடையாது. ஏழு ஜென்மம் என்பது ஒரு வரையறைக்காக சொல்வதாகும். இவற்றை நாம் புரிந்து கொள்வதற்கு தேவையான அறிவாற்றல் பெற பக்தி செய்வதே நம் கடமையாகும்.