செல்லாயிஅம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2916 days ago
அலங்காநல்லூர், அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் செல்லாயிஅம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. பெரியகருப்புசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.