திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷம்
ADDED :2844 days ago
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம்அபிேஷகங்கள் நடந்தன. மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.