திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம்
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்றுதேரோட்டம் நடைபெற்றது. ஐந்து கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று காலை 5:30 மணிக்குமூன்று தேர்களில் விநாயகர், திருத்தளிநாதர் -அம்பாள், சிவகாமி அம்மன் ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 4:25மணிக்கு அம்பாள் தேருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது. இன்று இரவு 7:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்களும் சீதளிக்குளம் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். நிலைத் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.