உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கமண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

திருத்தணி : கமண்டேஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை, பஜார் பகுதியில், காளிகாம்பாள் சமேத கமண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலை, 124 கலசங்கள் வைத்து பூஜைகள் நடந்தன. இந்நிலையில், நேற்றுமுன்தினம், காலை, 10:30 மணிக்கு, கலச ஊர்வலம் நடந்தது. நண்பகல், 11:00 மணிக்கு மூலவர்கள் காளிகாம்பாள், கமண்டேஸ்வரர் ஆகிய சன்னதிகளில் கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில், கே.ஜி.கண்டிகை, திருத்தணி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !