அரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2629 days ago
அரூர்: அரூரில், உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வாணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. மேலும், நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபி?ஷகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.