உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாடு, பிரசாத டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கிகளில் விநியோகம்

வழிபாடு, பிரசாத டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கிகளில் விநியோகம்

சபரிமலை: பக்தர்கள் வசதிக்காக அப்பம், அரவணை மற்றும் நெய்யபிஷேக டிக்கெட்டுகள் தனலெட்சுமி பேங்க் கிளைகளில் கிடைக்கிறது.சபரிமலை பயணத்தில் பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் கொண்டு வரும் நெய் அபிஷேகம் செய்ய பத்து ரூபாய் கட்டணம்.இதற்கான டிக்கெட்டுகள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு டிக்கெட் கவுண்டர்களில் வழங்கப்பட்டு வருவதுடன் அனைத்து தனலெட்சுமி வங்கி கிளைகளிலும் கிடைக்கிறது.மேலும் அவரணை, அப்பம் டிக்கெட்டுகளும் இந்த வங்கி கிளைகளில் கிடைக்கிறது. ஒரு டின் அரவணை 80 ரூபாய். ஒரு பாக்கெட் அப்பம் 35 ரூபாய். பக்தர்கள் வங்கி கிளைகளில் டிக்கெட் பெற்று சென்றால் சன்னிதானத்தில் இதற்காக சிறப்பு கவுண்டர் செயல்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் சிரமம் இல்லாமல் பிரசாதம் பெற்று செல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !