பழநி கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED :2785 days ago
பழநி: குடியரசுதினத்தை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ், பக்தர்களிடம் சோதனை என பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் மலைக் கோயிலில் வெளிப்பிரகாரம், வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை, யானைப்பாதை போன்ற இடங்களில் போலீசார் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு பரிசோதனை செய்தபின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.