மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து பரவசம்
ADDED :2506 days ago
இடைப்பாடி: திரளான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி அருகே, சவுரிபாளையம், ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், 16ல், பூச்சாட்டுதலுடன் மாசி திருவிழா தொடங்கியது. நேற்று, தீ மிதி விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர், மூன்று முதல், 15 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி, தீ மிதித்து மெய் சிலிர்க்க வைத்தனர்.