உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் கப்பரை விழா

திருப்பரங்குன்றம் கோயிலில் கப்பரை விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.

இக்கோயிலில் பிப்., 26ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமிகள் உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைக்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜைகள் நடந்தன. மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் முடித்து, பூசாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜைகள் நடத்தினர். இன்று (மார்ச் 4) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளிய உற்ஸவர் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.மார்ச் 9 இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு வரப்பட்டு,

அங்காள பரமேஸ்வரிக்கு பூஜைகள் முடிந்து பாரிவேட்டை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !