உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் சண்முகா அர்ச்சனை

மயிலம் முருகன் கோவிலில் சண்முகா அர்ச்சனை

மயிலம்:மயிலம் முருகன் கோவிலில் நேற்று சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்கக்கவச பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து யாக சாலை பூஜை நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !