நாமக்கல் முருகன் கோவிலில் பங்குனி கிருத்திகை வழிபாடு
நாமக்கல்: பங்குனி கிருத்திகை நாளை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து, மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, 32 நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலிதார்.
* நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், பாலதண்டாயுத பாணி ஆலயத்தில், சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டு, முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
* நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.