ஆர்.எஸ்.மங்கலம் மழை வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :2680 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் மழை வேண்டி ஆனந்தூர் ஜமாத்தார்கள் கண்மாய் பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.முன்னதாக பள்ளி வாசலில் இருந்து ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக மழை வேண்டி சிறப்புத் தொழுகை செய்தனர். சிறப்பு தொழுகையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.