துடைப்பத்தால் அடிக்கும் வினோத திருவிழா
ADDED :2354 days ago
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி பொங்கல் விழாவில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் கோவில் முன், ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி யுடன் அம்மன் கரகம் எடுத்து சென்று விழா துவங்கியது. பக்தர்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, நேற்று முத்தாலம்மன் கோவில் முன், மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் ஒன்று கூடினர். உடல் முழுவதும் சகதி பூசி, கயிற்றால் ஒருவரை ஒருவர் கட்டி, துடைப்பத்தால் ஒருவர் மற்றவரை அடித்துக்கொண்டனர். துடைப்பத்தால் அடிப்பதால், தீவினைகள் அகன்று உறவு முறை நீடிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.