உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாயி அம்மன் கோயில் தெப்பம் வசந்தப்பெருவிழா நிறைவு

பூமாயி அம்மன் கோயில் தெப்பம் வசந்தப்பெருவிழா நிறைவு

திருப்புத்துார்: திருப்­புத்­துார் பூமாயி அம்­மன் கோயில் வசந்­தப் பெரு­விழா தெப்ப உற்­ஸ­வத்­து­டன் நிறைவு பெற்­றது. இக்­கோ­யி­லில் பூச்சொ­ரி ­தல் விழா முடிந்து ஏப்.,24ல் கொடி­யேற்றம் நடந்து காப்­புக்­கட்டி வசந்­தப்­பெ­ரு­விழா துவங்­கி­யது.

தின­சரி இரவு அம்­பாள் கோயில் திருக்­கு­ளத்­தைச் சுற்றி பவனி வந்­தார். ஏப்.,30 ல் பால்­கு­டம், மே3 ல் அம்­மன் ரத ஊர்­வ­லம் நடந்­தது. பத்­தாம் நாளில்(மே 4) காலை 9:30 மணிக்கு தீர்த்­த­வாரி நடந்­தது, மாலை 4:00 மணிக்கு கோயில் வளா­கத்­தில் பொங்­க­லிட்டு அம்­மனை வழி­பட்­ட­னர். இரவு 7:30 மணிக்கு அலங்­க­ரிக்­கப்­பட்ட தெப்­பத்­தில் அம்மன் எழுந்­த­ருளி கோயில் திருக்­கு­ளத்தை வலம் வந்­தார். பெண்­கள் கோயில் குளத்­தைச் சுற்­றி­லும் தீபம் ஏற்­றி­னர். பின்­னர் அம்­மன் கோயில் எழுந்­த­ருளி மூல­வ­ருக்கு சந்­த­னக்­காப்பு களைந்து மஞ்­சள் நீராட்டு விழா நடந்­தது. ஏற்­பாட்­டினை வசந்­தப் பெரு­வி­ழாக்­குழு தலை­வர் நா.ஆறு.தங்­க­வேலு தலை­மை­யில் செய்­த­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !