ரமலான் சிந்தனைகள்- 7
ADDED :2342 days ago
தொழுகையில் ஏழு வசனம் நீங்கள் எப்போது தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.
● அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
● எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
● அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
● இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
● உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம்).மேலும்,உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
● எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
● உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
* இன்று (மே., 13ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:38 மணி
* நாளை (மே., 14ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:19 மணி