நடுவீரப்பட்டில் திரவுபதியம்மன் கோவிலில், 17ல் தீமிதி திருவிழா
ADDED :2339 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், வரும்17 ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது.
கடந்த 10ம் தேதி முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அரவாண் வீதி உலா நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது. 18ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.