உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை பகவதியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்

குளித்தலை பகவதியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்

குளித்தலை: வெள்ளப்பட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பகத்தர்கள், பால் குடம் எடுத்து, கிடா வெட்டி பூஜை செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

குளித்தலை அடுத்த, தோகைமலை குறிஞ்சி நகரில், பகவதி அம்மன் கோவில், வெள்ளப்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் நேற்று (மே., 19ல்)
திருவிழா நடந்தது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பின், அங்கிருந்து, பால்குடம், அக்னிச் சட்டி, பால் காவடி, பறவை காவடி மற்றும் கரும்புத் தொட்டில்களுடன், வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில், விரதம் இருந்த பக்தர்கள் பலர் இறங்கினர். பிறகு
அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். நேர்த்திக் கடனாக கிடா வெட்டியும், பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தும், அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !