திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேக பூஜை
ADDED :2344 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி நேற்று
(மே., 29ல்)முடிந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தினமும் தாராபிஷேகம் நடந்தது. நேற்று (மே., 29ல்) அக்னிதோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது.
கடந்த, 27ல், அம்மன் சன்னதி முன் கணபதி பூஜை நடந்தது. பின்னர் அன்றிரவு, 1,008 கலசங்கள் வைத்து, முதல்கால யாக பூஜை தொடங்கியது. நேற்று (மே., 29ல்) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு யாகசாலையில் வைத்த, 1,008 கலச புனித நீர், மேள தாளத்துடன் கொண்டு சென்று, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதை, ஆயிரக்கணக் கான பக்தர்கள் வழிபட்டனர்.