சோழவந்தான் காளியம்மன் கோயில் அருகே வைகாசி திருவிழா
ADDED :2604 days ago
சோழவந்தான்:சோழவந்தான் அருகே நாச்சிகுளம் விநாயகர் கருப்பணசாமி காளியம்மன் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 11ல் அரிவாள் மீது நின்று அருள்வாக்கு ஊர்வலம், 12ல் முளைப்பாரி பொங்கல் வைத்து வழிபாடு, 13ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.