உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்

நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை  முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத  ராஜராஜேஸ்வரர் கோவி லில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று  முன்தினம் (ஜூலை., 15ல்) ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அன்று மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, நால்வர், சித்தர் ஜீவசமாதிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இரவு 7:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !