சரநாராயண பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்!
ADDED :5082 days ago
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை ஹேமாம்பூஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (22ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6.30க்கு சுப்ரபாதம், 7.30க்கு நித்யபடி பூஜையும், 8 மணிக்கு உற்சவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் உள்புறப்பாடு நடந்து திருக்கண்ணாடி அறையில் சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், பிற்பகல் 4 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது.