உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் புனித தோமையார் தேவாலய கொடியேற்றம் கோலாகலம்

அவிநாசியில் புனித தோமையார் தேவாலய கொடியேற்றம் கோலாகலம்

அவிநாசி:அவிநாசியில் உள்ள புனித தோமையார் தேவா லயத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித தோமையார் தேவாலய திருவிழா, நேற்று 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு, அருட்தந்தை ஜோசப் பிரகாசம் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.

தாரை, தப்பட்டை முழங்க, தேவாலயத்தை சுற்றி கொடி எடுத்து செல் லப்பட்டு, பின், தேவாலய முகப்பில் இருந்த கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்றனர். வரும், 24, 25, 26 தேதிகளில், மாலை, 6:30 மணிக்கு, பல்வேறு குருக்கள் தலைமையில், திருப்பலி, மறையுரை நடக்கிறது.

வரும், 28ம் தேதி, திருவிழா கொண்டாடப்பட உள்ளது.அன்று காலை, 8:30 மணிக்கு, திருப்பலி யும், தொடர்ந்து, தேவாலயத்தை சுற்றி தேர்பவனியும் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலியை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், புனித தோமையார் பவனி செல்வார்.விழா ஏற்பாடுகளை, பங்கு குரு கென்னடி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !