உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் நவசண்டீ யாக யக்ஞ விழா துவக்கம்

சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் நவசண்டீ யாக யக்ஞ விழா துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் ஆர்ச் அருகில் உள்ள  விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடிப்பூர உற்ஸவ விழாவை யொட்டி இன்று  திருவிளக்கு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் கடந்த 25  ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. இன்று 31ம் தேதி  மாலை 6:00 மணிக்கு  ஆடிஅமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும் 1ம் தேதி  காலை 8:00 மணிக்கு கல்வியாகமும், மாலை 6:00 மணிக்கு மாணவர்களுக்கான  சிறப்பு பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகமும்,  மாலை 7:00 மணிக்கு சண்டி யாகமும், 3ம்தேதி காலை 8:00 மணிக்கு பால்குடம்,  சண்டியாக ஆரம்பம், பகல் 1:00 மணிக்கு யாகம் நிறைவும், அதனைத் தொடர்ந்து  அன்னதானமும் நடக்கிறது. 4ம் தேதி மாலை 7:00 மணிக்கு ஊஞ்சல்  அலங்காரமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக தலைவர்  இளங்கோவன், ரமணன் குருக்கள், அர்ச்சகர் பால சுப்பிரமணி அய்யர் ஆகியோர்  செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !