விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்
விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற் சவம் நடந்தது.
விருத்தாசலம் பாலாம்பிகை விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை பல்லக்கிலும், இரவு தனித்தனி வாகனங்களிலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள் பாலித்தனர். நேற்று முன்தினம் (ஆக., 3ல்) விருத்தாம்பிகை அம்மன் தேரோட்டம் நடந்தது.நேற்று (ஆக., 3ல்)திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
அதிகாலை 4:30 மணியளவில், நூற்றுக்கால் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி யதும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் பிரசாந்த், ஜெயின் ஜூவல் லரி உரிமையாளர் அகர் சந்த், தாசில்தார் கவியரசு உட்பட அறநிலையத்துறை, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.