உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தக்கரை மதுரை வீரன் கோவில் திருவிழா

மந்தக்கரை மதுரை வீரன் கோவில் திருவிழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மதுரைவீரன் கோவிலில், ஆடி திருவிழா நடக்கிறது. திருக்கோவிலூர், மந்தக்கரை வீதியில் உள்ள, பழமையான மதுரை வீரன் கோவிலில், ஆடி மாத ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 8:00 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பொம்மி சிறை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று கல்வரை கருவறுத்து, வெள்ளையம்மாளை சிறைபிடிக்கும் வைபவம் நடந்தது. நாளை காலை மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை, உற்சவர் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !