உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

திருவதிகை கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

பண்ருட்டி: திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடி மாதம் 4ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !