உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை

செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை

 செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில், ஆவணி மாத ராம பஜனை நடந்தது. இதை முன்னிட்டு  காலை 7:00 மணிக்கு கோதண்டராமர், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.தொடர்ந்து 9:00 மணிக்கு ராம பஜனை துவங்கியது. ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை  தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன்,நிகழ்ச்சியில, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு, ராமு, ராஜி, ராமசாமி, சுதர்சனம், ஞானசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும்  நடந்தது. உபயதாரர்கள், பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !