ஒன்பது நாளுக்கு மூன்று தேவி
ADDED :2359 days ago
நவராத்திரியின் ஒன்பது நாட்களை மூன்றாகப் பிரித்து முதல் மூன்று நாள் துர்கையையும், அடுத்த மூன்று நாள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் சரஸ்வதியையும், விஜயதசமியன்று ஆதிபராசக்தியையும் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது இன்னும் சிறப்பு. மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபட வேண்டும். ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகளில் வழிபட்டால் நவராத்திரி விரத பலனை எளிதில் பெறலாம்.