வில்வ இலையில் வசிப்பவள்
ADDED :2216 days ago
‘‘பில்வ நிலையாயை நம:” என்று லட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி திருமகளைப் போற்றுகிறது. வில்வஇலையில் வசிப்பவள் லட்சுமி. அதனால், வில்வமரத்திற்கு ‘ஸ்ரீவிருட்சம்’ என்று பெயருண்டு. வில்வ இலைகளால் சிவபெருமானை அர்ச்சிப்பதால் பாவநிவர்த்தி உண்டாகும் என்று வில்வபத்ர பூஜாபலன் கூறுகிறது. வில்வ இலைகள் 3,5,7 தளங்களாக இருக்கும். இந்த மரங்கள் இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. மந்திர சாஸ்திரப்படி, லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து பூஜிப்பது சிறப்பான பலன் தரும்.