உள்ளூர் செய்திகள்

பொறுப்புடன் வாழுங்க!

சுரங்கம் ஒன்றில் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வாசலில் ஒரு சிறுவன் தன் தந்தையைப் பார்ப்பதற்காக நின்றிருந்தான். அதை அறிந்த ஒரு தொழிலாளி ''தம்பி! இங்கே வருபவர்கள் எல்லோரும் ஹெல்மெட் மாட்டி இருப்பார்கள். முகம் தெரியாது. உன்னால் உன் தந்தையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. நீ வீட்டுக்குப் போ. அவர் அங்கே தானே வருவார்'' என்றார்.“எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், அவருக்கு என்னைத் தெரியுமே” என்றான் சிறுவன்.''ஆண்டவர் நம்மை நன்றாக அறிந்திருக்கிறார். நாம் போகும் வழியை அவர் நன்கறிவார்” என்கிறது பைபிள். மனிதன் தன் இஷ்டம் போல வாழவோ, பாவம் செய்யவோ கூடாது. அவர் மறைந்திருந்து நம்மைக் கவனிக்கிறார் என்பதை உணர்ந்து பொறுப்புடன் வாழ வேண்டும்.