பைபிள் பொன்மொழிகள்
UPDATED : மே 19, 2019 | ADDED : மே 19, 2019
* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறைந்து போகும் புகை.* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காக சாவதுமில்லை.* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலின் பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன்மீது வீசியதும், பூ இல்லாமல் போய் விடுகிறது. * மனக்கசப்பு, கோபம், குரோதம், கூக்குரல், ஏச்சுப்பேச்சு ஆகிய குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் மன்னித்து வாழுங்கள்.* விருந்து செய்யும்போது ஏழைகளையும், நடக்க இயலாதவர் களையும் கூப்பிடுவாயாக.* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.