உதவியவர்களை மறக்காதீர்
UPDATED : நவ 03, 2022 | ADDED : நவ 03, 2022
* இக்கட்டான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காதீர்கள். * நல்ல வீரனைப் போல கஷ்டங்களைக் தாங்கிக் கொள்ளுங்கள். * கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.* பொறாமை இருக்குமிடத்தில் சகல தீய செயல்களும் இருக்கும்.* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.* கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். * பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.* சோம்பேறியே... எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை.-பொன்மொழிகள்