உள்ளூர் செய்திகள்

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

பெற்றவர்களை ஏமாற்றி, பணம் பறித்து போதைக்கும், பெண்களுக்காகவும் செலவழித்து, வாழ்க்கையையே அழித்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களெல்லாம் திருந்த வேண்டும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. * ஒருவன் தன் உறவினரையும், குறிப்பாக தன் வீட்டாரின் நலனில் அக்கறை இல்லாமல் போனால், அவன் தீயவனாக இருப்பான்.* தன் தகப்பனிடம் கொள்ளையடித்து, தன் தாயை துரத்தி விடுகிறவன் வெட்கம், அவமானத்தை உண்டாக்குகிற மகன்.* தகப்பனையும், தாயையும் வெறுப்பவனின் செல்வம் அழிந்து போகும்.* உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், தகப்பனையும், தாயையும் பெருமைபடுத்து.இதை மனதில் கொண்டு, பெற்றவர்கள் மனம் இனிக்க வாழ்ந்து, உங்கள் வாழ்வையும் இனிமையாக்கி கொள்ளுங்கள்.