உள்ளூர் செய்திகள்

எறிந்தது எதற்காக

காட்டு வழியாக இருவர் நடந்து சென்றனர். அப்போது சிங்கம் ஒன்றை கண்டனர். அதில் ஒருவர் தன் முதுகில் இருந்த பையை துாக்கி வீசினார். மற்றொருவரோ ''சிங்கத்திடம் இருந்து தப்ப முடியாது. பிறகு ஏன் எறிந்தாய்'' எனக் கேட்டார். ''இப்போது என் கவலை சிங்கத்திடம் இருந்து தப்ப வேண்டும் என்பதல்ல. உன்னை விட வேகமாக ஓட வேண்டும் என்பதுதான்'' என சொல்லி ஓட்டம் பிடித்தார்.