உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பி.ராஜாராம், திருநின்றவூர், திருவள்ளூர்.*விரும்பிய வாழ்க்கை கிடைக்க யாரை வழிபடலாம்?ராதையுடன் உள்ள கிருஷ்ணருக்கு புதன்தோறும் மாலையில் விளக்கேற்றுங்கள். சி.கங்கா, பப்பன்கிலேவ், டில்லி.*வீட்டில் குழலுாதும் கிருஷ்ணர் இருக்கலாமா?வீணையுடன் இருக்கும் சரஸ்வதியை போல குழலுாதும் கிருஷ்ணர் படமும் இருக்கலாம்.எம்.மயூரா, ஹலசூரு, பெங்களூரு.*கிருஷ்ணருக்கு பிடித்தது முறுக்கு, சீடையா...ஆமாம்... குழந்தையைப் போல நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிடுவான்.எம்.கணேஷ், திருமங்கலம், மதுரை.*கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் என்ன?அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தைக் காக்கவும் அவதரித்தார். ஆர்.செல்வம், எட்டையபுரம், துாத்துக்குடி.*கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவத்கீதை படிக்கலாமா...படிக்கலாம். பாகவதத்தில் உள்ள 10வது அத்தியாயத்தை படியுங்கள். ஆர்.அகல்யா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*தேய்பிறை எட்டாம் நாளில் குழந்தை பிறந்தால் தோஷமா...இந்த நாளில் கிருஷ்ணர் பிறந்ததால் தோஷம் இல்லை. பி.தண்டபாணி, திருவாமத்துார், விழுப்புரம்.*கிருஷ்ணருக்கு மயில்தோகை சூட்டுவது ஏன்?அழகு, அன்பு, துாய்மையின் அடையாளம் இது. கே.காவ்யா, நத்தம், திண்டுக்கல்.*பாவம் போக பரிகாரம் சொல்லுங்கள்.மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...' எனத் தொடங்கும் திருப்பாவை பாடலை தினமும் பாடுங்கள்.எல்.காமாட்சி, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி.*கிருஷ்ணர் பூரண அவதாரமா... திருவிளையாடல் நிகழ்த்தி, கீதையை உபதேசித்து தர்மத்தை காப்பவர் என்பதால் இவரே பூரண அவதாரம்.