உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ம.பூஜா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: சனீஸ்வரர் கெட்டவரா...இல்லை. கெடுப்பதிலும், கொடுப்பதிலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை.வா.மணி, கோடம்பாக்கம், சென்னை: காலசர்ப்ப தோஷம் என்றால்...பிறந்த லக்னம், கிரகங்கள் அனைத்தும் ராகு, கேதுவின் பிடிக்குள் இருப்பது. ரா.அம்பிகா, பழநி, திண்டுக்கல்: ஹோரை என்றால் என்ன?தினமும் தலா ஒரு மணி நேரம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். (ராகு, கேது தவிர) இதுவே ஹோரை. வெ.ராஜாராம், நொய்டா, டில்லி: திருப்பதி சென்றால் திருப்பம் வருமா?ஏழுமலையான் அருளால் திருப்பம் வரும். தி.செல்வி, குருந்தன்கோடு, கன்னியாகுமரி: வெளிநாட்டு வேலைக்கு செல்ல யாரை வழிபடலாம்?சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள்.பா.ஸ்ரீநிதி, காரைக்குடி, சிவகங்கை: மாதவிலக்கின் போது துளசி மாடத்தை சுற்றலாமா?தீட்டு முடிந்து தலைக்கு குளித்தபின் துளசிமாடத்தை சுற்றலாம். சொ.சிவா, மணிமுத்தாறு, திருநெல்வேலி: குருநாதரின் அருள் கிடைக்க...குருநாதரை வணங்கி சேவை செய்தால் போதும். தா.பரிமளா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: தனக்கு மிஞ்சித்தான் தானம் என்றால்... தனக்கும், குடும்பத்தினருக்கும் செலவழித்தது போக மிஞ்சியதை தானம் செய்தால் போதும். கு.கல்யாண், திருநாவலுார், விழுப்புரம்: ஹோமத்தில் இட்ட நாணயத்தை செலவழிக்கலாமா... கூடாது. பணப்பெட்டியில் வையுங்கள்.