உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

யு.ஆர்த்தி, ஏரோசிட்டி, டில்லி: அமைதியுடன் வாழ... முன்னோர் சொல்லியபடி ஒழுக்கம், மனக்கட்டுப்பாடுடன் வாழுங்கள். டி.காவ்யா, இருக்கன்குடி, விருதுநகர்: 48 நாள் விரதம் இருந்தால் விருப்பம் நிறைவேறுமா...தகுதிக்கு ஏற்றதாக உங்கள் விருப்பம் இருக்க வேண்டும். நிறைவேறுமா என்ற சந்தேகம் வேண்டாம். ஆர்.ஆனந்த், எட்டையபுரம், துாத்துக்குடி: தீய செயலில் ஈடுபட்ட எனக்கு நிம்மதி கிடைக்குமா...மனம் திருந்தி கடவுளை சரணடைந்தால் நிம்மதி கிடைக்கும். கா.ராஜேஸ்வரி, பசவன்குடி, பெங்களூரு: கர்மவினை தீர...கோயில் வழிபாடு அவசியம். இதையே 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றார் அவ்வையார். ரா.பூரணி, ஆவடி, திருவள்ளுர்: ஜாதகத்தில் தோஷம் இருந்தால்...ஜாதக ரீதியான தோஷத்திற்கு பரிகாரம் அவசியம். உ.ம்: திருமணத் தடை விலக வியாழன் அன்று குருபகவானை வழிபடலாம். பே.புஷ்பராணி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: *நவக்கிரகத்தை வெவ்வேறு திசையில் பிரதிஷ்டை செய்வது ஏன்?வானில் உள்ள கிரகங்கள் வெவ்வேறு திசையில் சஞ்சரிப்பதை தவ சக்தியால் ஞானிகள் கண்டறிந்தனர். அதனடிப்படையில் இப்படி செய்கிறோம். மு.அமராவதி, அவிநாசி, கோயம்புத்துார்: விநாயகர் பிரம்மச்சாரியா... குடும்பஸ்தரா...பிரம்மச்சாரி, குடும்பஸ்தர் என இரண்டு கோலங்களிலும் விநாயகரை வழிபடலாம். வி.மாரி, நத்தம், திண்டுக்கல்: ருத்ராட்சம், ஸ்படிக மாலையை யார் அணியலாம்? ஒழுக்கம், பக்தி கொண்டவர்கள் அணியலாம். கு.துவாரகேஷ், திங்கள்சந்தை, கன்னியாகுமரி: இயற்கை சீற்றத்தை தடுக்க ஆன்மிக ரீதியாக வழி உண்டா?மனிதனுக்கு இயற்கை தரும் தண்டனை இது. தர்மவழியில் வாழ்ந்தால் இதை தடுக்கலாம்.