உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 கே.தினேஷ், திருப்பரங்குன்றம், மதுரை: தினமும் மவுனவிரதம் இருக்கலாமா?தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். பி.யமுனா, ஏரோசிட்டி, டில்லி: ஆதியந்த பிரபு என்றால்...விநாயகர் பாதி, அனுமன் பாதியாக இணைந்த வடிவம். இவரை வழிபட வெற்றி கிடைக்கும். ஆர்.கங்கா, தரமணி, சென்னை: தலைமைப்பதவி கிடைக்க... தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் செவ்வாய் அன்று விரதமிருந்து முருகன் கோயிலுக்கு செல்லுங்கள். வி.நர்மதா, மருதமலை, கோயம்புத்துார்: அன்னபூரணிக்கு என்ன நைவேத்யம் செய்யலாம்?சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம். ஆர்.கிருஷ்ணா, திருத்தணி, திருவள்ளூர்: பூஜையின் போது மணி ஓசை கட்டாயமா...மணி ஓசை கேட்பதால் கடவுளைத் தவிர வேறு சிந்தனை வராது. டி.சிந்து, திருநள்ளாறு, புதுச்சேரி: விருப்பம் நிறைவேற... திங்கள் அன்று சிவனுக்கு விரதமிருங்கள். இதை தொடர்ந்து செய்வதால் குடும்பத்திற்கு நன்மை. ஏ.மைக்கேல், கோவில்பட்டி, துாத்துக்குடி: இன்றைய பெண்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது. எஸ்.கோமதி, கடையநல்லுார், தென்காசி: வழிபாட்டில் மஞ்சளுக்கு முதலிடம் ஏன்?மஞ்சள் என்றால் மங்களம். அதனால் தான் மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை பூஜையில் வைக்கிறோம். கே.சரஸ்வதி, வேடசந்துார், திண்டுக்கல்: வழிபாட்டின் போது பசு இல்லாவிட்டால் கன்றை பூஜிக்கலாமா?பூஜிக்கலாம்.