கேளுங்க சொல்கிறோம்
கே.ராம்குமார், அனுப்பானடி, மதுரை: சந்திராஷ்டம நாளில் ...மவுனமாக இருங்கள். விநாயகரை வழிபடுங்கள். ஜி.வி.ரமேஷ்குமார், களியக்காவிளை, கன்னியாகுமரி: ஜாதகத்தில் மாந்தி என குறிப்பிடுகிறார்களே...சனீஸ்வரரின் மகன் மாந்தி. நவக்கிரகத்துடன் சேர்த்து இவரையும் சிலர் குறிக்கிறார்கள். கே.எஸ்.விஜயகுமார், மயிலாப்பூர், சென்னை: வாசலில் பாம்புத் தோல் கிடந்தால் தோஷமா...தோஷமில்லை. எஸ்.ரவிக்குமார், சிதம்பரம், கடலுார்: விஸ்வரூபம் என்றால்...வானுக்கும், பூமிக்குமாக வளர்ந்து தன் உருவத்தை கடவுள் பெரிதாக காட்டுவது. எஸ்.சரவணக்குமார், பழநி, திண்டுக்கல்: புனித நதிகளில் நீராடாமல் தலையில் தீர்த்தம் தெளிக்கலாமா...உடல்நலம் இல்லாத நிலையில் தலையில் தெளிக்கலாம். மற்றவர்கள் நீராடுவது அவசியம். எஸ்.முத்துக்குமார், ஆழ்வார்குறிச்சி, தென்காசி: வலமிருந்து இடமாகச் சன்னதியை சுற்றலாமா... சுற்றக் கூடாது. இடமிருந்து வலமாகச் சுற்றுவதே சரியானது. எம்.எஸ்.அருண் குமார், பல்லடம், திருப்பூர்: பிரம்ம முகூர்த்தத்தின் (அதிகாலை 4:30 - 6:00 மணி) சிறப்பைச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மனம், உடல் புத்துணர்வுடன் இருக்கும். யோகாசனம், தியானம், ஜபம் செய்ய ஏற்ற நேரம். எஸ்.சுரேஷ்குமார், கல்யாண்புரி, டில்லி: ஜபம், உபாசனை என்றால்... ஜபம் - தினமும் மூன்று வேளை 108 முறை மந்திரம் சொல்வதுஉபாசனை - வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்வது ஜே.சசிக்குமார், வில்லாபுரம், மதுரை: சிலர் சொல்வது அப்படியே நடக்கிறதே... பக்தி, ஒழுக்கம், உண்மை, உதவும் குணம் இருப்பவர்கள் சொன்னால் அப்படியே பலிக்கும்.