உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஆர்.கமலினி, கன்னிவாடி, திண்டுக்கல்.*சிவராத்திரியன்று அன்னதானம் செய்யலாமா?சிவனுக்காக விரதமிருந்து விழித்திருக்கும் நாள் சிவராத்திரி. விரதம் இல்லாதவர்கள் மட்டும் அன்னதானம் செய்யலாம்.வி.பவித்ரன், திருத்தணி, திருவள்ளூர்.*சிவ மந்திரம் ஜபித்தால் தீய பண்புகள் தீருமா...நமசிவாய, சிவாயநம மந்திரங்களை தினமும் ஜபிக்க தீய பண்புகள் தீரும். எம்.ராகவி, நல்லாத்துார், கடலுார்.*மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி - வேறுபாடு என்ன?பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை தன் கழுத்தில் அடக்கி உலகைக் காத்தார் சிவன். இது மாசி தேய்பிறை சதுர்த்தசியன்று நடந்தது. இந்நாளை மகாசிவராத்திரியாகவும், மற்ற மாதங்களில் மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.ஜி.விஷால், தேவனஹள்ளி, பெங்களூரு. *மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்யலாமா... பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆயுள், உடல் நலம் பெருகும். நிம்மதி கிடைக்கும்.கே.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.*மகாபிரளயம் என்றால் என்ன?கலியுகம் முடிந்ததும் இந்த உலகத்தை சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொண்டு, உயிர்களுக்கு எல்லாம் பேரின்பம் அளிப்பார். இதை மகாபிரளயம் என்பர். வி.விக்ரம், சுரண்டை, திருநெல்வேலி.*யோக சிவராத்திரி என்றால் என்ன?திரயோதசி - பார்வதி சதுர்த்தசி - சிவன் இந்த இரு திதிகளும் திங்கட்கிழமையன்று ஒன்று சேர்வது யோக சிவராத்திரி.கே.பாஸ்கர், ஒண்டிப்புதுார், கோயம்புத்துார்.*சிவன் கோயிலுக்கு செல்ல நேரம் பார்க்க வேண்டுமா?'ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்' இதை சிந்தித்தபடி உடனே கோயிலுக்குச் செல்லுங்கள்.எஸ்.வைஜந்தி, கரோல்பாக், டில்லி.*சிவராத்திரியன்று மந்திர தீட்சை பெறலாமா?மந்திர தீட்சை பெற்று, ஜபிக்கத் தொடங்குவது நல்லது. எஸ்.அவினாஷ், கொட்டாம்பட்டி, மதுரை.*சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பதில்லையே...சில சிவன் கோயில்களில் தீர்த்தம் கொடுக்கின்றனர். இதைக் குடித்தால் பாவம் தீரும். அகால மரணம் நிகழாது. எம்.ராஜாராம், கருங்கல், கன்னியாகுமரி.*கனவில் நல்ல பாம்பு என்னைக் கொத்தியது. பரிகாரம் என்ன?சிவனருளால் நல்லதே நடக்கும். பணம், புகழ் சேரும். சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.