உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

குமார், சிவகங்கை.*உழைப்பின்றி சேர்த்த பணம்....உழைப்பால் கிடைத்த பணம் நிற்கும். உழைக்காமல் வந்த பணம் வந்த வேகத்தில் மறையும். எம்.சண்முகப்பிரியா, குழித்துறை, கன்னியாகுமரி.*முக்கனிகளால் அபிஷேகம் செய்வது ஏன்?மா, பலா, வாழை. இவை மூன்றும் சிறந்தவை என்பதால் அபிஷேகம் செய்கிறோம் கே.பாலச்சந்தர், பாரிமுனை, சென்னை.*தலவிருட்சத்தில் என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?தலவிருட்சத்தை வழிபட்டால் போதும். பொம்மை, தொட்டில், துணியால் முடிச்சிடுவது, நுாலைச் சுற்றுவது கூடாது. சி.சந்தோஷ், மதுக்கரை, கோயம்புத்துார்.*திருமணம், அன்னதானத்தில் உணவு வீணாகிறதே...உணவை வீணாக்குவது பாவம். தேவைக்கேற்ப உணவு தயாரியுங்கள். சி.சாய்சரண், ஏரோசிட்டி, டில்லி.*பெருநெறி என்றால் என்ன?எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி. ஆனால் நாம் மதம், ஜாதி, மொழி என குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறோம். கே.மாலதி, மேகமலை, தேனி.*48 நாள் விரதத்தில் அசைவம் சாப்பிடலாமா...பாவம் போக்குவதே விரதம். அச்சமயம் அசைவம் சாப்பிடுவது கூடாது. மீண்டும் 48 நாள் விரதம் இருங்கள். எஸ்.புவனேஸ்வரி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.*உறுப்பு தானத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறதா?அனுமதிக்கிறது. ஒருவர் தன் உறுப்பை மற்றொருவர் பயன்படுத்தும் விதத்தில் தானம் அளிப்பது சிறந்த பண்பு. தாராளமாக கொடுங்கள். ஆர்.ஆனந்தி, சன்யாசிகுப்பம், புதுச்சேரி. *கவலையில் இருந்து மீள வழியுண்டா?உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடையுங்கள். கவலை வராது. ஆர்.அபிதா, புவனகிரி, கடலுார்.*எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?காலையில் அரை மணி நேரம் மவுனமாக இருங்கள். செவ்வாய், வெள்ளி, பிரதோஷ நாட்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.எம்.கே.மகாலட்சுமி, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. அதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.