கேளுங்க சொல்கிறோம்!
வி.ராஜராஜன், நத்தம், திண்டுக்கல்.*கடனாக கொடுத்த பணம் கிடைக்க யாரை வழிபடலாம்?திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்ளுங்கள். பணம் திரும்ப கிடைக்கும்.எஸ்.சுப்பிரமணியன், குரோம்பேட்டை, சென்னை. *தரையில் அமர்ந்து சாப்பிடுதல், டேபிளில் அமர்ந்து சாப்பிடுதல் எது சரியானது?தரையில் அமர்ந்து சாப்பிடுவது சரியானது. இது உடற்பயிற்சியாகவும் அமையும்.எல்.சசிதேவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*விரலி மஞ்சள், மஞ்சள் கிழங்கு இதில் எதை சுமங்கலிக்கு கொடுக்கலாம்?இரண்டுமே மங்களம் தரும் பொருள். ஆனாலும் நீராடும் போது பூசும் மஞ்சள் கிழங்கே சிறந்தது.அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி.*தினந்தோறும் கோயில்களில் யாகம் நடக்குமா...பெரிய கோயில்களில் மட்டும் யாகம் நடக்கும். இதற்கு 'நித்ய ஹோமம்' என்று பெயர். பக்தர்கள் உபயமாக நடத்துவதை 'காமிய ஹோமம்' என்பர். பி.ரவி, பெங்களூரு.* வீட்டில் பரணில் உள்ள வீணையை பூஜையில் வைக்கலாமா?நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ' என வருந்துகிறார் மகாகவி பாரதியார். பூஜையில் வைப்பது நல்லது. வீணை கற்கும் மாணவருக்கு தானமாக அளிப்பது சிறப்பு. எம்.கவிதா, புளியங்குடி, தென்காசி.*பூஜையறையில் மேற்கு நோக்கி சுவாமி படங்கள் இருக்கலாமா?கிழக்கு நோக்கி வையுங்கள். முடியாவிட்டால் மேற்கு நோக்கி வைக்கலாம். கே..லலிதா, பப்பன்கிளேவ், டில்லி.*என் கணவர் குடியில் இருந்து மீள என்ன செய்யலாம்?கடலுார் மாவட்டம் பண்ருட்டி 'திருவதிகை வீரட்டானேஸ்வரர்' (சிவன்) கோயிலில் வழிபடுங்கள். ஜி.கனிஷ்கா, விருதுநகர்.*திருஷ்டியைப் போக்கும் சக்தி, கல் உப்பிற்கு உண்டா?உண்டு. மிளகாய் வத்தல், கல் உப்பு, முச்சந்தியில் எடுத்த மண் மூன்றையும் சேர்த்து, தலையைச் சுற்றி விட்டு நெருப்பில் இடுங்கள். ஆர்.உமா, மந்தைவெளி, சென்னை.*கோபுரங்களில் பஞ்சவர்ணம் தீட்டுவது ஏன்?நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம். அவற்றை காப்பது நம் கடமை என்பதால் கோபுரங்களில் பஞ்சவர்ணம் தீட்டப்படுகிறது. கி.அருணாசலம், மணக்குளம், புதுச்சேரி.*குளிகை நேரத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது?குளிகை நேரத்தில் நல்ல செயல்களை செய்யலாம். இறுதிச்சடங்குகளை செய்யக் கூடாது.