உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்வேதமனைத் துக்கும் வித்தாகும்- கோதை தமிழ்ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு.பொருள்: கோதையாகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாசுரங்களைப் படித்தால் தீமை அனைத்தும் நீங்கும். பரம்பொருளான திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக விளங்கும் அப்பாடல்களை அறியாத மனிதர்களை இந்த உலகம் சுமந்திருப்பது கூட வம்பாகும்.