உள்ளூர் செய்திகள்

பெயரும் பொருளும்

மகாவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை சொல்ல முடியாதவர்கள் அவருடைய இருபத்து நான்கு பெயர்களையாவது தினமும் சொல்லலாம் என்கிறது விஷ்ணுபுராணம். அப்பெயர்களும் அதற்குரிய பொருளும் தெரிந்தால் சிறப்பு தானே... * கேசவன் - நீண்ட முடியை உடையவர்* நாராயணன் - உலகத்தை இருப்பிடமாக கொண்டவர்* மாதவன் - ஞானத்தலைவர்* கோவிந்தன் - நிலத்தை மீட்டவர்* விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்* மதுசூதனன் - மது என்னும் அரக்கனை அழித்தவர்* திரிவிக்ரமன் - மூவுலகை வென்றவர்* வாமனன் - புகழுக்குரியவர்* ஸ்ரீதரன் - அதிர்ஷ்டம் உள்ளவர், திருவையுடையவர்* ரிஷிகேசன் - புலன்களை ஆள்பவர்* பத்மநாபன் - வயிற்றில் தாமரை கொண்டவர்* தாமோதரன் - தன்னடக்கமானவர்* சங்கர்ஷணன் - ஒடுக்கி கொள்பவர்* வாசுதேவன் - உள்ளுறைபவர்* அநிருத்தன் - எதிரியில்லாதவர்* புருஷோத்தமன் - மனிதரில் சிறந்தோர்* அதோக்கஷஜன் - அண்டங்களை இடமாக கொண்டவர்* நரசிம்மன் - சிம்மமுக மனித உடல் உடையவர்* அச்சுதன் - வீழ்ச்சி இல்லாதவர்* ஜனார்த்தனன் - பரிசளிப்பவர்* உபேந்திரன் - இந்திரன் தம்பி * ஹரி - துன்பம் துடைப்பவர் * கிருஷ்ணன் - கரியவர்