உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பூஜையறையில் இரண்டு முகமாகத் திரியிட்டு விளக்கு ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். * வில்வ மரம் இருக்கும் வீட்டில் குடியிருந்தால் காசி முதல் ராமேஸ்வரம் வரையான சிவத்தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். * கோயிலின் மதில் சுவருக்கு உள்ளே எக்காரணம் கொண்டு செருப்பு அணிந்து செல்லக் கூடாது.* கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது. இவருக்கு எள் சோறு படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். * மந்திரங்கள் சொல்லி ஹோமம் நடத்தும் போது ஹோமம் முடியும் வரை யாரிடமும் பேசக் கூடாது. * அதிகாலை 4:00 - 5:00 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும். * இறந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் செல்பவர்கள் ருத்ராட்சம், ஸ்படிகமாலைகளை அணியக் கூடாது.* திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் முருகன் வில்லும், அம்பும் ஏந்திய கோலத்தில் இருக்கிறார்.* ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, அண்ணி, மாமியார் ஆகியோர் பெற்ற தாய்க்கு சமமானவர்கள்.* உடல்நலம் இல்லாதவர்கள் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் நோய் குணமாகும்.* இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதனால் இதய பூர்வமாக நாம் சொல்லும் கடவுளின் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறோம்.* எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வை துளியில் இருந்து உருவான புனிதமான தானியம்.* சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பனும், ராமனுக்கு உணவு கொடுத்த குகனும் எளிய வேடுவ பக்தர்கள்.