உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. அதாவது இந்த உலகத்திற்கு அவர்தான் சொந்தக்காரர். * 'ஸ்வம்' என்பதற்கு தமிழில் உடைமை என்று பொருள். இதனால்தான் கோயில் கல்வெட்டுக்களில் திருச்சிற்றம்பலம் உடையார், திருவேங்கடம் உடையார், திருநாகேச்சுரம் உடையார், கபாலீசுவரம் உடையார் என்று தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்கள்.* ஸ்வம் என்பதில் இருந்தே ஸ்வந்தம் (சொந்தம்) என்ற சொல் உருவானது. இதனால்தான் கேரளாவில் கோயிலைச் சேர்ந்த சொத்தை 'தேவஸ்வம்' என்கிறார்கள். * குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால் வைஷ்ணவர்கள் ஸ்ரீராமானுஜரை 'உடையவர்' என்கிறார்கள்.* உலகில் உள்ளதனைத்தும் கடவுள் ஒருவருக்கே உடைமையாகும். இதற்காகவே, 'எல்லாம் என் உடைமையே' என்று தாயுமானவரும் பாடினார்.* சிவபெருமானுக்கு 'பசுபதி' என்றும் பெயருண்டு. இங்கு பசு என்பது நம்மைக் குறிக்கும். பதி என்பது தலைவன். * சைவ சித்தாந்தத்தில் பதி - பசு - பாசம் என்று சொல்லப்படும். இதையேஆதிசங்கரர் தனது அத்வைத வேதாந்தத்தில் பிரம்மம் - ஜீவன் - மாயை என்று சொல்கிறார். * தெய்வம் என்றால் 'விதி'. ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலனே விதி. * சிவன்கோயிலில் கர்ப்ப கிரஹத்தின் சுவரில் மேற்கு பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். சிவபெருமானுடைய அறுபத்தி நான்கு வடிவங்களில் ஒருவர் லிங்கோத்பவர். * விநாயகர் வழிபாட்டில் விசேஷமானது அவரை வலம் வருவதுதான். காரணம் இவர் தனது பெற்றோரான சிவன், பார்வதியை உலகம் என போற்றி வலம் வந்து பழமும், பலனையும் பெற்றார்.