உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்ம்ருத்யு: ஸர்வ ஹரஸ் சாஹம் உத்ப வஸ்ச பவிஷ்யதாம்!கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர் மேதாத்ருதி: க்ஷமா!!ப்ருஹத் ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்த ஸாமஹம்!மாஸாநாம் மார்க சீர்ஷோ அஹம் ருதுாநாம் குஸுமாகர:!!பொருள்:நான் எல்லாவற்றையும் அழிக்கும் மரணதேவனும் நானே! இனி உண்டாக்குவதற்கு மூலகாரணமும் நானே! மாதர்களில் கீர்த்தி தேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், வாக் தேவியாகவும், ஸ்ம்ருதி தேவியாகவும், மேதா தேவியாகவும், த்ருதி தேவியாகவும், க்ஷமா தேவியாகவும் இருக்கிறேன்.வேதத்தில் இசைப்பாடல் நிறைந்த 'பிருகத்சாமம்' என்னும் சாமவேதம் நானே! சந்தங்களில் காயத்ரியாகவும், மாதங்களில் மார்கழியாகவும், பருவங்களில் வசந்தமாகவும் இருப்பவனும் நானே!